நான் ஒரு பாவி நான் ஒரு பாவி | Naan oru paavi naan oru paavi | Tamil Lyrics
Ravi Bharath • Aayathamaa 3
#183
Font
Chorus
நான் ஒரு பாவி நான் ஒரு பாவி
நான் செய்த பாவங்கள் பல்லாயிரம்
நான் ஒரு பாவி நான் ஒரு பாவி
நான் செய்த பாவத்துக்கு நான் காரணம்
Verse 1
பாவத்தில் பாவத்தில் நான் விழுந்து விட்டேன்
என்னை நான் என்னை நான் வெறுத்து விட்டேன்
உமது ஆலோசனை பாரம் என்றேன்
உம்மை நான் தள்ளிவிட்டு தூரம் சென்றேன்
Verse 2
சந்தர்பங்கள் என்றும் சூழ்நிலைகள் என்றும்
பாவம் செய்த பின்னாலே பழி சுமத்தி
தூண்டிவிட்டார் என்றும் மாற்றிவிட்டார் என்றும்
மற்றவரை எந்நாளும் குற்றப்படுத்தி
நான் செய்த பாவத்துக்கு நியாயங்கள் சொன்னேன் – என்னை
இரட்சித்த தேவனிடம் காரணம் சொன்னேன்
குற்றங்கள் ஒப்புக்கொள்ளும் மனமுமில்லை
என்னில் நல்லதோர் குணமுமில்லை
Verse 3
எண்ணங்களுக்குள்ளே எக்கச்சக்க பாவம்
வேஷம்போட்டு திரிவதால் தெரிவதில்லை
சொல்லில் ஒரு வாழ்க்கை சொல்லாமல் ஓர் வாழ்க்கை
மற்றவர்கள் எந்தன் நிலை அறிவதில்லை
கட்டளை மீறுகின்றேன் அனுதினமும் – ஒரு
கல்லைப்போல் மாறினது எந்தன் மனமும்
என்னைப்போல் பாவி இந்த உலகில் உண்டா – ஐயோ
எனக்கு மன்னிப்பு உண்டா
Verse 4
மன்னிக்கத்தானே மண்ணுக்கு வந்தேன்
மன்றாடும் உன்னை என் மகனாக்கினேன்
மன்னிக்கத்தானே மண்ணுக்கு வந்தேன்
மன்றாடும் உன்னை என் மகளாக்கினேன்
Verse 5
புதிய இதயத்தை கொடுத்திடுவேன்
பாவங்கள் நீங்க உன்னை கழுவிடுவேன்
எனது ஆவியினால் நிரப்பிடுவேன்
உன்னை நான் என்னோடு சேர்த்துக்கொள்வேன்
------x------x------x------
Chorus
Naan oru paavi naan oru paavi
Naan seitha paavangal pallayiram
Naan oru paavi naan oru paavi
Naan seitha paavathukku naan kaaranam
Verse 1
Paavathil paavathil naan vizhunthu vitten
Ennai naan ennai naan veruthu vitten
Umadhu aalosane baaram endren
Ummai naan thallivittu dooram sendren
Verse 2
Sandharbangal endrum soozhnilaigal endrum
Paavam seitha pinnaale pazhi sumathi
Thoondivittaar endrum maattivittaar endrum
Matravare ennaalum kuttrappaduthi
Naan seitha paavathukku nyaayangal sonnen – ennai
Iratchitha thevanidam kaaranam sonnen
Kuttrangal oppukollum manamumillai
Ennil nallathor gunamumillai
Verse 3
Ennangalukkulle ekkachakka paavam
Veshampottu thirivadhaal therivadhillai
Sollil oru vaazhkai sollaamal or vaazhkai
Matravargal enthan nilai arivadhillai
Kattalai meerugindren anudinamum – oru
Kallaippol maarinadhu enthan manamum
Ennaippol paavi indha ulagil undaa – aiyo
Enakku mannippu undaa
Verse 4
Mannikkathaane mannukku vandhen
Mantraadum unnai en maganaakkinean
Mannikkathaane mannukku vandhen
Mantraadum unnai en magalaakkinean
Verse 5
Pudhiya ithayathai koduthiduven
Paavangal neenga unnai kazhuviduven
Enadu aaviyinaal nirappiduven
Unnai naan ennodu serthukkolven