பசுத்தோல் போர்த்திய புலியா நீ | Pasuththol porthiya puliyaa nee | Tamil Lyrics
Ravi Bharath • Aayathamaa 2
#175
Font
Chorus
பசுத்தோல் போர்த்திய புலியா நீ
பயிரை மேயும் வேலியா
வெளியில் ஒரு குணம் கோயிலில் ஒரு குணம்
இதுதான் உந்தன் வாழ்க்கையா
Verse 1
அனலும் இல்லாமல், குளிரும் இல்லாமல்
வாழும் வாழ்க்கையில் பயனில்லை
தேவன்மேல் அன்பும் பிறன்மேல் அன்பும்
வாழ்க்கையில் இருந்தால் பயமில்லை
Verse 2
குடியை தேடி புகையை ஊதி
வாழ்நாள் முழுவதும் களியாட்டம்
ஆலயத்தில் மட்டும் மகா பரிசுத்தம்
பயங்கரமான பாவ குற்றம் – இது
Verse 3
வாயின் வஞ்சகம் வீண் வாக்குவாதம்
மனதில் முழுவதும் மாய்மாலம்
உன்னால் கெட்டுப்போகும் தேவனது நாமம்
கிறிஸ்துவுக்குன்னால் அவமானம்
Verse 4
ஆவியில் நிரம்பி பாஷைகள் பேசி
ஞாயிற்றுக்கிழமையில் ஆராதனை
அடுத்த நாளே பாவத்துக்கு அடிமை
தேவனுக்குன்னால் மனவேதனை
Verse 5
கண்கள் திறந்தால் வெளிச்சமுண்டாகும்
இருளிலிருந்து வெளியே வா
அத்துமா ரட்சிப்பு மிகவும் அவசியம்
இதயத்தை இன்று தேவனுக்கு தா
------x------x------x------
Chorus
Pasuththol porthiya puliyaa nee
Payirai meyum veliyaa
Veliyil oru gunam koyilil oru gunam
Idhudhaan undhan vaazhkaiyaa
Verse 1
Analum illaamal, kulirum illaamal
Vaazhum vaazhkaiyil payanillai
Thevanmel anbum piranmel anbum
Vaazhkaiyil irundhaal bayamillai
Verse 2
Kudiyai thedi pugaiyai oodhi
Vaazhnaal muzhuvadhum kaliyaattam
Aalayathil mattum mahaa parisuththam
Payangaramaana paava kuttram – idhu
Verse 3
Vaayin vanjagam veen vaakkuvaatham
Manadhil muzhuvadhum maaymaalam
Unnaal kettupogum thevanadhu naamam
Kristhuvukkunnaal avamaanam
Verse 4
Aaviyil nirambi baashaigal pesi
Gnaayitrukizhamaiyil aaraathanai
Adutha naale paavathukku adimai
Thevanukkunnaal manavedhanai
Verse 5
Kangal thiranthaal velichamundaagum
Irulilirunthu veliyae vaa
Aththumaa ratchippu migavum avasiyam
Idhayathai indru thevanukku thaa