உம்மை ஆராதிக்கத்தான் என்னை அறிந்தீர் | Ummai aaraathikathaan ennai arindheer | Tamil Lyrics
Ravi Bharath • Aayathamaa 5
#205
Font
Chorus
உம்மை ஆராதிக்கத்தான் என்னை அறிந்தீர்
உம்மை ஆர்ப்பரிக்கத்தான் என்னை அழைத்தீர்
உந்தன் நாமம் உயர்த்தவே என்னில் ஜீவன் கொடுத்தீர்
உம்மை பற்றிக்கொள்ளத்தான் என்னை படைத்தீர்
Verse 1
ஏழு விண்மீன் கைதனில் பொன்விளக்கு மத்தியில்
உலாவிடும் உன்னதர் நீரே உமக்கு நிகர்
முந்தினவரும் நீர்தான் பிந்தினவரும் நீர்தான்
மரித்தவரும் நீர்தான் மூன்றாம் நாளில் உயிர்பெற்று
வாழ்கின்ற வேந்தன்
Verse 2
எப்பக்கமும் கூர்மையோ பட்டயம் பற்றினீரோ
கண்கள் அக்னி ஜூவாலையோ பாதங்கள் வெண்கலமோ
தேவ அவி ஏழுண்டு விண்மீன்களும் ஏழுண்டு
எல்லாம் இயேசுவில் உண்டு அப்பேர்ப்பட்ட அழகுள்ள
ஆண்டவர் மைந்தன்
Verse 3
பரிசுத்தர் நீர்தானே சத்தியரும் நீர்தானே
தாவீதின் திறவுகோல் கொண்டவரும் நீர்தானே
நீர் பூட்டிய வாசலை மானிடன் திறப்பானோ
நீர் திறந்த வாசலை பூட்டிவைக்க கூடுமோ
நீர் ஆள்கின்றீர் என்றும்
Verse 4
உண்மையும் சத்தியமும் உள்ளடங்கும் சாட்சியே
தேவனின் சிருஷ்டிக்கு ஆதியே ஆமென் நீரே
நீதியுள்ள நாதனே நீர் என்றும் நித்தியரே
ஆலயத்தின் ஆண்டவா ஆராதனை நாயகா
நீர் வாழ்க வாழ்க என்று
Verse 5
அப்பா பிதாவே நான் உம்மை துதிப்பேன்- எந்தன்
ஆத்ம நேசரே நான் உம்மை துதிப்பேன்
பரிசுத்த ஆவியே என்றும் உம்மை துதிப்பேன்
மூன்றில் ஒன்றாய் விளங்கும் என் தேவ தேவனே
------x------x------x------
Chorus
Ummai aaraathikathaan ennai arindheer
Ummai aarpparikathaan ennai azhaiththeer
Undhan naamam uyarthave ennil jeevan koduttheer
Ummai pathikkolathaan ennai padaiththeer
Verse 1
Ezhu vinmeen kaithanil ponvilakku maththiyil
Ulaavidum unnathar neere umakku nigar
Mundhinavarum neerthaan pindhinarum neerthaan
Mariththavarum neerthaan moondraam naalil uyirpetru
Vaazhgindra venthan
Verse 2
Eppakkamum koormaiyo pattayam patrineero
Kangal akni juvaalaiyo paadangal venkalamo
Theva avi ezhundu vinmeengalum ezhundu
Ellaam Iyesuvil undu apperpatta azhagulla
Aandavar mainthan
Verse 3
Parisuththar neerthaane saththiyarum neerthaane
Daaveedin thiravukol kondavarum neerthaane
Neer poottiya vaasalai maanidan thirappaanoo
Neer thirantha vaasalai poottivaikka koodumoo
Neer aalkindreer endrum
Verse 4
Unmaiyum saththiyum ulladangkum saatchiye
Thevanin sirushtikku aathiye aamen neere
Needhiyulla naadhane neer endrum niththiyare
Aalayathin aandavaa aaraathanai naayagaa
Neer vaazga vaazga endru
Verse 5
Appaa pithave naan ummai thudhippen - enthan
Aatma nesare naan ummai thudhippen
Parisuththa aaviye endrum ummai thudhippen
Moondril ondraai vilangum en theva thevane