வா என்றழைக்கும் தெய்வ சத்தம் கேட்குதா | Vaa endrazhaikkum theiva satham ketkuthaa | Tamil Lyrics
Ravi Bharath • Aayathamaa 1
#165
Font
Chorus
வா என்றழைக்கும் தெய்வ சத்தம் கேட்குதா
நீ திரும்ப மாட்டாயா உன்னை தேடி பார்க்கிறார்
Verse 1
உன் நொறுங்குண்ட இதயத்தை அவரிடம் கொடுத்தால்
அதை சரி செய்து மறுபடியும் உன்னிடம் கொடுப்பார்
உன் மன வேதனைகளை நீ சொல்லி அழுதால்
அவ்வேதனைகளை தீர்த்து ஆறுதல் அளிப்பார்
உன் கஷ்டங்கள் அறிவார்
உன் கண்ணீரை அறிவார்
உன்னை பார்ப்பார் உன்னை மீட்பார் உனை காப்பார்
Verse 2
உன் மனபாரம் யாவையும் அவரிடம் சொல்லு
உனை வழிகாட்டும் இறைவனிடம் முழங்காலில் நில்லு
உன் உறவுகள் கைவிட்டால் உறவாக இருப்பார்
உன் உடலுன்னை கைவிட்டால் உயிராக இருப்பார்
உன் தேவனை தேடு அவர் பாதங்கள் நாடு
முழுதான மனதோடு துதியோடு
Verse 3
உன் சோர்வினை தீர்ப்பது மனிதர்கள் இல்லை
உன் நோய்களை தீர்ப்பது மருந்துகள் இல்லை
நீ பிழைத்திட ஒரு வழி உன் கிறிஸ்து தானே
உன் பாவங்கள் மறைவதும் அவரிடம்தானே
வேறு வழியை தேடாதே நீ தூரம் செல்லாதே
பதறாதே தயங்காதே மயங்காதே
----x----x------x----
Chorus
Vaa endrazhaikkum theiva satham ketkuthaa
Nee thirumba maattaayaa unnai thedi paarkkiraar
Verse 1
Un norungunda ithayathai avaridam koduthaal
Adhai sari seithu marubadiyum unnidam koduppaar
Un mana vedhanaigalai nee solli azhudhaal
Avvedhanaigalai theerthu aarudhal alippaar
Un kashtangal arivaar
Un kanneerai arivaar
Unnai paarppaar unnai meetpaar unai kaappaar
Verse 2
Un manabaaram yaavaiyum avaridam sollu
Unai vazhikaattum iraivanidam muzhankaalil nillu
Un uravugal kaivittaal uravaaga iruppaar
Un udalunnai kaivittaal uyiraaga iruppaar
Un thevanai thedu avar paadangal naadu
Muzhudhaana manathodu thudiyodu
Verse 3
Un sorvinai theerpadhu manithargal illai
Un noygalai theerpadhu marundhugal illai
Nee pizhaithida oru vazhi un Kristhu thaane
Un paavangal maraivadhum avaridamthaane
Veru vazhiyai thedaathe nee dooram sellaadhe
Patharaathe thayangaathe mayangaathe